ADDED : ஆக 13, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: வீட்டில் இறந்து கிடந்த ஆண் நபர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் புதுப்பேட்டை அண்ணா வீதியை சேர்ந்தவர் ராஜ்முகமது மகன் முகமது யாசிர், 43. குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல துாங்கச்சென்ற முகமது யாசிர், காலை வெகுநேரமாகியும் கதவை திறக்கவில்லை.
அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை. தகவலறிந்த விருத்தாசலம் போலீசார், முகமது யாசிர் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
