sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையை கடந்த போது வேன் மோதி ம.பி., நபர் பலி

/

சாலையை கடந்த போது வேன் மோதி ம.பி., நபர் பலி

சாலையை கடந்த போது வேன் மோதி ம.பி., நபர் பலி

சாலையை கடந்த போது வேன் மோதி ம.பி., நபர் பலி


ADDED : ஜன 21, 2025 06:25 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா அருகே உள்ள பாய் குந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசங்கர், 62; விவசாயி. இவர், தன் ஊரில் இருந்து, 40 பேருடன் பஸ்சில் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தார். நேற்று காலை, விழுப்புரம் மாவட்டம் சித்தணி அருகே டீ குடிப்பதற்காக, பஸ் நிறுத்தப்பட்டது.

ராமசங்கர், சாலையின் மறுபக்கத்தில் இருந்த கடையில் டீ குடித்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற வேன், ராமசங்கர் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த ராமசங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விக்கிரவாண்டி சப் - இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், ராமசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வேன் டிரைவர், உளுந்துார்பேட்டை, இருந்தை கிராமத்தை சேர்ந்த சரவணன், 40, மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us