ADDED : அக் 29, 2024 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: பெரியகாப்பான்குளம் கரந்தை அய்யனார் கோவிலில் நேற்று முன்தினம் நடந்த மண்டலாபிேஷக நிறைவு பூஜைகள் நடந்தது.
விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் கரந்தை அய்யனார் கோவில் கும்பாபி ேஷகம் கடந்த செப்., 8ம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து, தினசரி மண்டலாபி ேஷக விழா நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மண்டலாபி ேஷக நிறைவு விழா நடந்தது.
இதையொட்டி, காலை 7:00 மணிக்கு கரந்தை அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம், காலை 10:30 மணியளவில் சிறப்பு யாகம் நடந்தது. பகல் 12:00 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.