/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.என்.பாளையத்தில் கடைவீதி திருவிழா
/
சி.என்.பாளையத்தில் கடைவீதி திருவிழா
ADDED : பிப் 02, 2025 05:02 AM

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் கடைவீதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடைவீதி திருவிழா எனும் தை மாத 3ம் வெள்ளி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.11:00 மணிக்கு அம்மன் வீதி உலாவாக கடைவீதியில் உள்ள மண்டகப்படிக்கு வந்து அங்கு மதியம் 12:30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
இரவு 9:00 சுவாமி காமதேனு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது.பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.