sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் துவங்கியது

/

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் துவங்கியது

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் துவங்கியது

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் துவங்கியது


ADDED : பிப் 17, 2024 05:35 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் மாசி மக உற்சவம் வெகு விமரிசையாக 23 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு மாசி மக உற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது.

தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக நாளை 18ம் தேதி இரவு தங்க கருட சேவை, 19ம் தேதி சேஷ வாகனம், 20ம் தேதி அனுமந்த வாகனம், 21ம் தேதி யானை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது. 23ம் தேதி அதிகாலை ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து கிள்ளை சமுத்திர தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

சேத்தியாதோப்பு தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் உற்சவத்தை தொடர்ந்து, 24ம் தேதி காலை கிள்ளை கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி நடக்கிறது. 25ம் தேதி நஞ்சைமகத்துவாழ்க்கை மண்டகப்படி, 29ம் தேதி புவனகிரியில் முத்துப்பல்லக்கில் வீதியுலா, மார்ச் 1ம் தேதி சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.

2ம் தேதி குமாரகுடி, கானுார் வழியாக பாளையங்கோட்டை, ராமாபுரம் கிராமங்களில் உற்சவம் நடக்கிறது. மார்ச் 7ம் தேதி இரவு ஸ்ரீமுஷ்ணம் எல்லைக்கு வந்து சேருகிறார். எல்லையில் சுவாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. 9ம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.

ஏற்பாடுகளை தக்கார் மாலா, செயல் அலுவலர் ராஜ்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us