sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்

/

மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்

மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்

மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்


ADDED : ஜூலை 25, 2025 06:41 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அருகே பள்ளிக்கு சென்ற மாணவியை, முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், வழிமறித்து பிளேடால் கையை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே 10ம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று காலை 8:30 மணிக்கு வழக்கம் போல் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது, பைக்கில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், மாணவியை வழிமறித்து அவரது கையில் பிளேடால் கிழித்து, கன்னத்தில் தாக்கினர்.

உடன், திடுக்கிட்ட மாணவி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பினர்.

தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us