ADDED : ஜன 26, 2026 03:43 AM

புவனகிரி: மொழிப்போர் தியாகி நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாமலை நகரில் உள்ள மாணவர் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ம.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் ராஜ எழிலன், பேராசிரியர் பக்கிரிசாமி, துரை எழிலரசன், அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், தொண்டரணி தமிழ்வாணன், நகர செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தராஜ், பழனிராஜா, சசிகுமார், ஜெய்சங்கர், மற்றும் கட்சி நிர்வாகிகள் அசோக்குமார், செந்தில் முருகன், ஆனந்தன், முருகவேல், செந்தில்குமார், சூசை ராஜ், பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

