
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : கிள்ளை அடுத்த உத்தமசோழமங்கலம் கிராமத்தில், வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் அமுதா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் அன்பரசு வரவேற்றார்.சேர்மன் கருணாநிதி, ஊராட்சி தலைவர் சுகன்யா முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமை, பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன், துவக்கி வைத்தார்.முகாமில், டாக்டர்கள் ஆதிரா, மிதிலைராஜன், சுகுனேஷ், கனிமொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
முகாமில், பல் டாக்டர் செல்வகுமார், இயன்முறை டாக்டர் சுஜாஸ்ரீ, சித்தா டாக்டர் ஷோபனா, சமுதாய செவிலியர் உஷா, ஊராட்சி துணைத் தலைவர் தேன்மொழி, முத்துவேல், சுகாதார ஆய்வார்கள் சரவணன், சரண்ராஜ், ராஜன் மற்றும்செவிலியர்கள் பங்கேற்றனர்.சுகாதார ஆய்வாளர் சவுந்திரராஜன் நன்றி கூறினார்.