ADDED : டிச 01, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த மனநலம் பாதித்த பெண், சிகிச்சை பலனின்றி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த விசலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகள் ஆர்த்தி, 21; மன நலம் பாதிக்கப்பட்டவர்.
இவர் கடந்த நவ., 26ம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

