sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்தடையை கண்டித்து நள்ளிரவில் சாலை மறியல் விருதை - திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

/

மின்தடையை கண்டித்து நள்ளிரவில் சாலை மறியல் விருதை - திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

மின்தடையை கண்டித்து நள்ளிரவில் சாலை மறியல் விருதை - திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

மின்தடையை கண்டித்து நள்ளிரவில் சாலை மறியல் விருதை - திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஏப் 14, 2025 11:57 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்,; பெண்ணாடத்தில் மின்தடையை கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் நடத்திய சாலை மறியலால் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதித்தது.

பெண்ணாடம் பேரூராட்சி, அம்பேத்கர் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் மீண்டும் மின்தடை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவு 12:00 மணியளவில் 50 க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி, மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 12:30 மணியளவில் மின்சாரம் மீண்டும் கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மின்தடையை கண்டித்து நள்ளிரவில் நடத்திய சாலை மறியலால், விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் ௩௦ நிமிடம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us