/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் கோர்ட்டில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்
/
கடலுார் கோர்ட்டில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்
ADDED : ஜூலை 25, 2025 02:44 AM
கடலுார்: கடலுார் கோர்ட்டில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த நெய்வாசல் வெள்ளாற்றில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. அதில் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, குன்னம் தொகுதி எம்.எல்.ஏ., சி வசங்கர் தலைமை தாங்கினார். போராட்டம் திடீரென கலவரமானது. பாதுகாப்பு பணியில் இருந்த 9 போலீசார் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்தனர். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார், தற்போதையை அமைச்சர் சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
இவ்வழக்கு எம்.எல்,ஏ., க்கள், எம்.பி.,க்கள் வழக்கை விசாரிக்கும் கடலுார் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி சுபத்திராதேவி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்திராதேவி, விசாரணையை வரும் ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.