/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமைச்சர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
அமைச்சர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அமைச்சர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அமைச்சர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஆக 29, 2025 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: நெய்வேலியில் வேளாண்துறை அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நெய்வேலி மந்தாரக்குப்பம் கடைவீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர் பெனாசீர் முன்னிலை வகித்தனர்.
அதில் வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்த நாளையொட்டி பொதுமக்கள், பேரூராட்சி துப்பரவு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் விஜயராகவன், மதிமுருகன், அலாவுதீன், புஷ்பராஜ், அக்பர் உட்பட பலர் பங்கேற்றனர்

