ADDED : ஜூன் 12, 2026 08:57 AM

கடலுார்: நெய்வேலியில் எம்.எல்.ஏ., அலுவலகத்தை சொரத்துார் ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
நெய்வேலியில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தை சொரத்துார் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து நிர்வாகிகள், மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி பொதுமக்களிடையே மனுக்களை பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் சூரியமூர்த்தி, மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் பக்தரட்சகன், தெற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகர், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர்கள் ஞானச்செல்வி, கோவிந்தராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் அன்பு, பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், அவைத்தலைவர் முத்துலிங்கம், மீனவரணி புவனேந்திரன், விவசாய அணி லோகநாதன், மாணவரணி செயலாளர் சஞ்சீவி, வர்த்தக பிரிவு ராமலிங்கம், திருமலைவாசன், சிறுபான்மை பிரிவு அபு, பண்ருட்டி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் அண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
