/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை திறப்பு எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
ரேஷன் கடை திறப்பு எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மே 03, 2025 01:58 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே புதிய ரேஷன் கடையை பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில், சிதம்பரம் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி 13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஊராட்சி துணை தலைவர் விஜயராஜா வரவேற்றார். ரேஷன் கடையை, பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். விழாவில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரவி, பாஸ்கர், நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், நிர்வாகிகள் தனபால், சண்முகம், குமார், ரவி, சுரேஷ், அஜீத்ராம் உட்பட பலர் பங்கேற்றனர்.
கிளை செயலாளர் சம்பத் நன்றி கூறினார்.