/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாடக மேடை திறப்பு எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
நாடக மேடை திறப்பு எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மே 21, 2025 02:59 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே புதியதாக கட்டப்பட்ட நாடக மேடையை பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
சிதம்பரம் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி ஊராட்சியில், புதியதாக நாடக மேடை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன் முன்னிலை வகித்தனர். நாடக மேடையை, பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து பேசினார்.
விழாவில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரவி, பாஸ்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், நிர்வாகிகள் செந்தில், சிவராஜ், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கிளை செயலாளர் வேலு நன்றி கூறினார்.