ADDED : ஜன 02, 2024 04:16 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த வேலு மனைவி சரண்யா என்பவரது கூரைவீடு நேற்று காலை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
இதையறிந்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கினார். அப்போது, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ், காங்., மாவட்ட பொருளாளர் ராஜன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
