/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோனுாரில் முருங்கை நாற்று நிழல்வலை பாழாகும் அவலம்
/
கோனுாரில் முருங்கை நாற்று நிழல்வலை பாழாகும் அவலம்
ADDED : பிப் 26, 2024 05:48 AM

பெண்ணாடம்: கோனுாரில் பயன்பாடின்றி பாழாகும் முருங்கை நாற்றங்கால் நிழல்வலையை சீரமைத்து, நாற்று உற்பத்தியை துவக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த கோனுார் ஊராட்சியில் கடந்தாண்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கடந்தாண்டு முருங்கை நாற்றங்கால் பண்ணை அமைக்க 3 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிழல்வலை அமைக்கப்பட்டது.
ஆனால் இதுவரை முருங்கை நாற்று உற்பத்தி பணி துவங்கவில்லை. இதனால் நாற்றங்கால் நிழல்வலை பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. எனவே, ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு, முருங்கை நாற்றங்கால் அமைக்கும் பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

