ADDED : ஜன 31, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த பெலாந்துறை ஊராட்சி கணபதிகுறிச்சி காலனியை சேர்ந்தவர் பால்ராஜ் மகள் அபிநயா, 23. இவர் கடந்த 27 ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்ப வில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தாய் செல்வக்குமாரி கொடுத்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, அபிநயாவை தேடி வருகின்றனர்.