ADDED : அக் 14, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலூர்; மகள் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வடலூர் அடுத்த, ரோட்டு மருவாய், முல்லை நகர் பகுதியில் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ், 57; இவருக்கு 3 மகள்கள் மற்றும், 1 மகன் உள்ளனர்.
இதில் இளைய மகள் ஜென்சி மேரி, 19; படித்து, வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த, 10ம் தேதி, வளையல் வாங்குவதற்காக வடலூர் சென்ற ஜென்சி மேரி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் இல்லை.
இது குறித்த புகாரின் பேரில், வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.