ADDED : செப் 24, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி : மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் அஜித்குமார், 26; இவர் கடந்த, 20ம் தேதி, குறிஞ்சிப்பாடியில் மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்றவர் வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் சாந்தி அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து அஜித்குமாரை தேடி வருகின்றனர்.