ADDED : ஏப் 10, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே இரண்டு குழந்தைகளுடன் பெண் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் முதுநகர் அடுத்த கரையேறவிட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன்,36; இவரது மனைவி அபிராமி,34; தனியார் மருத்துமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 6ம் தேதி மாலை, வீட்டிலிருந்த அபிராமி மற்றும் குழந்தைகளை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஞானசேகரன் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.