ADDED : பிப் 06, 2026 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: தாயை காணவில்லை என மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விருத்தாசலம் வயலுாரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் மனைவி உமாராணி, 45; மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த, 2ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்து, அவரது மகள் நவநீதா அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

