sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாலத்தில்  விரிசல்  அபாயம்  வாகன ஓட்டுனர்கள் அச்சம் 

/

பாலத்தில்  விரிசல்  அபாயம்  வாகன ஓட்டுனர்கள் அச்சம் 

பாலத்தில்  விரிசல்  அபாயம்  வாகன ஓட்டுனர்கள் அச்சம் 

பாலத்தில்  விரிசல்  அபாயம்  வாகன ஓட்டுனர்கள் அச்சம் 


ADDED : நவ 04, 2024 06:17 AM

Google News

ADDED : நவ 04, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்று பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் செடிகள் வளர்வதால் பாலம் உறுதித்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது.

கடலுார் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது.

பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டு பகுதியில் ஆங்காங்கே செடிகள் வளர்ந்துள்ளது. ஏற்கனவே பாலத்தில் இருபுறமும் தடுப்பு கட்டையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு பாலம் வலுவிழந்து காணப்படுகிறது.

தற்போது, செடிகள் வளர்வதால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் பாலம் உறுதி தன்மையை இழந்து மேலும் வலுவிழக்கும் அபாயம் உள்ளது. ஜவான்ஸ்பவன் வழியாக கம்மியம்பேட்டை பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதால் அதிர்வு ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தடுப்பு கட்டைகளை சீரமைக்கவும், செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us