/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 10, 2025 11:23 PM
புதுச்சத்திரம்' : ஆண்டார்முள்ளிப்பள்ளம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 7ம் தேதி எஜமானர் சங்கல்பம், புண்ணிய வாகனம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
8ம் தேதி அங்குரார்பணம், ரக்க்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. 9ம் தேதி விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ சாந்தி, மூன்றாம் காலயாக பூஜை, மகாமாரி சகஸ்ர நாம பஞ்ச அர்ச்சனை நடந்தது.
நேற்று காலை கோ பூஜை, நான்காம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி, நாடி சந்தானம், கடம் புறப்பாடு செய்து, மகாகும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.