ADDED : ஜன 02, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூலவர் பெருமாள் முத்தங்கி சேவையில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி, திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூபம்,7:00 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உற்சவர் ஸ்ரீசரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராப்பத்து 10ம் நாள் உற்சவம் சாற்றுமுறையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பகல் 12:00 மணிக்கு உச்சிகாலம், மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.

