/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
/
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
ADDED : அக் 31, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் தேசிய ஒன்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்தியா முழுவதும் அக்டோபர் 30 ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கபடுகிறது.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் செயல் அலுவலர் சண்முகசுந்தரி தலைமையில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்றனர்.
இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைபாட்டையும் காப்பாற்ற என்னையே அர்ப்பணிப்பேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வை பேணி காப்பேன் என உறுதிமொழி ஏற்றனர்.