/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 26, 2025 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி சார்பில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி பேரணியை துவக்கி வைத்தார். பேரூராட்சி பணியாளர்கள் கட்டாயம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

