/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு கோவிலில் நவராத்திரி பூஜை
/
நடுவீரப்பட்டு கோவிலில் நவராத்திரி பூஜை
ADDED : அக் 05, 2024 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று நவராத்திரி பூஜை துவங்கியது.
பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் விநாயகர்,காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் மூலவர்,காமாட்சியம்மன் உற்சவர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.இரவு மகா தீபாராதனை நடந்தது.
பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.