sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் மாவட்டத்தில் இன்று 'நீட்' தேர்வு: 4,560 பேர் பங்கேற்பு

/

கடலுார் மாவட்டத்தில் இன்று 'நீட்' தேர்வு: 4,560 பேர் பங்கேற்பு

கடலுார் மாவட்டத்தில் இன்று 'நீட்' தேர்வு: 4,560 பேர் பங்கேற்பு

கடலுார் மாவட்டத்தில் இன்று 'நீட்' தேர்வு: 4,560 பேர் பங்கேற்பு


ADDED : மே 04, 2025 04:46 AM

Google News

ADDED : மே 04, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், இன்று நடக்கும் நீட் தேர்வை 4,560 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

கடலுார் மாவட்டத்தில், இன்று (4ம் தேதி) நீட் தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்க கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 4,560 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 720 பேர், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 480, குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி.,மேல்நிலைப் பள்ளியில் 480, நெய்வேலி என்.எல்.சி.,கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 600, பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில் 480, நெய்வேலி வட்டம் 10 என்.எல்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480, நெய்வேலி வட்டம் 11 என்.எல்.சி.,பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 720, கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரியில் 600 பேர் என மொத்தம் 4,560 மாணவர்கள் 8 மைங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தடையில்லாத இணைய வசதி மற்றும் அடிப்படை வசதி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us