/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையில் ஆபத்தான பள்ளம் சீரமைப்பதில் அலட்சியம்
/
சாலையில் ஆபத்தான பள்ளம் சீரமைப்பதில் அலட்சியம்
ADDED : ஜன 15, 2025 12:20 AM

கடலுார் அரசு தலைமை மருத்துவமனை எதிரே, சாலையில், பாதாள சாக்கடை மேன்ஹோல் அருகே கடந்த வாரம் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார், பள்ளம் ஏற்பட்ட பகுதியில் பேரிகார்டு அமைத்து, போக்குவரத்து நெரிசலை சரிசெய்து வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்தனர்.
ஆனால், ஒருவாரம் ஆகியும், பள்ளத்தை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.