/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த நெல்லை ஆசாமி கைது
/
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த நெல்லை ஆசாமி கைது
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த நெல்லை ஆசாமி கைது
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த நெல்லை ஆசாமி கைது
ADDED : ஜன 14, 2025 06:41 AM

பண்ருட்டி: கடலுார் மாவட்டம், பண்ருட்டி பணிக்கன்குப்பம் கும்பகோணம் சாலையில் வசிப்பவர் ஆரோக்கியராஜ் மகன் அந்தோணிராஜ்,42; இவரது மனைவி பிரிஜித் லெத்திரியாமேரி. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி இரவு, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்தோணிராஜை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி பிரஜித்லத்ரியாமேரியின் 6 பவுன் சங்கிலியை பறித்தனர்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்தோணிராஜின் தம்பி பவுல்ராஜ் வீட்டிலும் புகுந்து 7 பவுன் நகைகளை பறித்துக் கொண்டனர். காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, டவுசர் கொள்ளையர் 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஜாமினில் வெளியில் வந்த திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாலுகா பசுபதி கோவிலைச் சேர்ந்த கதிரேசன் மகன் ரஞ்சித் என்பவர் தலைமறைவானார். இவரை கடந்த 5 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர்.
பண்ருட்டி டி.எஸ்.பி., ராஜா தலைமையில் பண்ருட்டி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான தனிப்படையினர், கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே தலைமறைவாக இருந்த ரஞ்சித்,45; நேற்று முன்தினம் கைது செய்தனர்.

