sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி மேலாண்மை தகவல் மைய தேர்வில் நெட் வசதி 'கட்'

/

பள்ளி மேலாண்மை தகவல் மைய தேர்வில் நெட் வசதி 'கட்'

பள்ளி மேலாண்மை தகவல் மைய தேர்வில் நெட் வசதி 'கட்'

பள்ளி மேலாண்மை தகவல் மைய தேர்வில் நெட் வசதி 'கட்'


ADDED : ஜூன் 07, 2024 06:22 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் பள்ளி மேலாண்மை தகவல் மைய ஆட்கள் தேர்வின்போது, இணையதள வசதி துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை தகவல் மையத்தில், பதிவு செய்வதற்காக ஆட்கள் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது.

இதற்காக விண்ணப்பித்திருந்த இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதில், ஒரு சுற்றுக்கு 15 பேர் வீதம், மொத்தம் 10 சுற்றுகளாக தேர்வு நடந்தது. முதல் சுற்றில் 15 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதியபோது, திடீரென இணையதள வசதி துண்டிக்கப்பட்டது. இதனால், அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்வர்கள் பாதியில் வெளியில் வந்தனர். இதையடுத்து, தேர்வு மைய அலுவலர்கள், சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் 15 பேருக்கு மறுத்தேர்வு நடத்தினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us