sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியா காட்டிய கருணையால் உயிர் தப்பிய ஒரு லட்சம் பாகிஸ்தானியர்

/

இந்தியா காட்டிய கருணையால் உயிர் தப்பிய ஒரு லட்சம் பாகிஸ்தானியர்

இந்தியா காட்டிய கருணையால் உயிர் தப்பிய ஒரு லட்சம் பாகிஸ்தானியர்

இந்தியா காட்டிய கருணையால் உயிர் தப்பிய ஒரு லட்சம் பாகிஸ்தானியர்

13


ADDED : ஆக 28, 2025 04:42 AM

Google News

13

ADDED : ஆக 28, 2025 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக, மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கையால், பாகிஸ்தானில் 1 லட்சம் பேர் ஆபத்தில் இருந்து தப்பினர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பின், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் படைகள், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தன. மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது; பாகிஸ்தானுடன் இருந்த தொடர்பை முற்றிலுமாக நிறுத்தியது.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஜூன் முதல் பருவ மழை பெய்து வருகிறது. வெள்ளத்திற்கு இதுவரை 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 7,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.

தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடர்பாக, பாகிஸ்தானுக்கு சமீபத்தில் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ராவி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆறுகளில் பெரும்பாலானவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் வழியாக கடலில் சேர்கிறது.

எனவே, மனிதாபிமான நடவடிக்கையாக மத்திய அரசு, பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகம் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூர், கசூர் ஆகிய பகுதிகளிலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.

மூழ்கிய கர்தார்பூர் குருத்வாரா
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நரோவால் மாவட்டத்தில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா தர்பார் சாஹிப், சீக்கியர்களின் முக்கிய குருத்வாராக்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் 80,000க்கும் மேற்பட்ட இந்திய சீக்கியர்கள் வழிபாடு நடத்த செல்கின்றனர். இந்த குருத்வாரா, ராவி ஆற்றின் வெள்ள நீரில் மூழ்கியது. அங்கு, 100-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் இந்தியர்கள் உள்ளனரா என்ற தகவல் இல்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.








      Dinamalar
      Follow us