sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போலீசாரின் 'வாக்கிடாக்கி'யை ஆற்றில் வீசியோருக்கு வலை

/

போலீசாரின் 'வாக்கிடாக்கி'யை ஆற்றில் வீசியோருக்கு வலை

போலீசாரின் 'வாக்கிடாக்கி'யை ஆற்றில் வீசியோருக்கு வலை

போலீசாரின் 'வாக்கிடாக்கி'யை ஆற்றில் வீசியோருக்கு வலை


ADDED : செப் 20, 2024 02:04 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு,:கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே, ஒரத்துார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டுகள் ரமேஷ், ரகோத்தமன் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு பைக்கில் ரோந்து சென்றனர். கிளியனுார் காலனியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் ஆனந்த், 40, அறிவழகன் மகன் அபினேஷ், 26, ஆகியோர் வெள்ளாறு கோணாற்று மதகுக்கட்டையில் அமர்ந்து, மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் போலீசார், 'நள்ளிரவில் இங்கு அமர்ந்து மது குடிக்கக் கூடாது; வீட்டிற்கு செல்லுங்கள்' என கூறினர். போதையில் இருந்த இருவரும், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்த வாக்கிடாக்கி கருவியைப் பறித்து, வெள்ளாற்றில் வீசிவிட்டு, தப்பியோடி விட்டனர்.

போலீசார் இருவரும், வெள்ளாற்றில் வாக்கி டாக்கியை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று வரை கிடைக்கவில்லை. ஒரத்துார் போலீசார், ஆனந்த், அபினேஷை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us