ADDED : ஆக 23, 2025 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரையில் பாதாள காளி மற்றும் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலா யாகம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கரா தேவி மண்டபத்தில் யாகவேள்விகள் துவங்கியது. மதியம் 2:30 மணிக்கு வேள்வியில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது.
தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 3:00 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜை யில் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.