ADDED : அக் 23, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலா யாகம் நடந்தது.
நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரையில் பாதாளகாளி மற்றும் பிரத்தியங்கராதேவி கோவில்கள் உள்ளது.
இந்த கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலா யாகம் நடந்தது.
அதனையொட்டி நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் யாகவேள்விகள் ஆரம்பிக்கப்பட்டது. 2:30 மணிக்கு வேள்வியில் மிளகாய்வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து,யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.மாலை 3:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜையில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.