
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: பிரத்தியங்கராதேவிக்கு நடந்த நிகும்பலா யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடுவீரப்பட்டு, நரியன்ஓடை கரையில் பாதாள காளி மற்றும் பிரத்தியங்கரா தேவி கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில் நேற்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலாயாகம் நடந்தது.
மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கரா தேவி மண்டபத்தில் யாக வேள்வி துவங்கியது. தொடர்ந்து, யாகவேள்வியில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது.
மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் 2:30 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

