sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணிக்காக கருத்துக் கேட்பு

/

என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணிக்காக கருத்துக் கேட்பு

என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணிக்காக கருத்துக் கேட்பு

என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணிக்காக கருத்துக் கேட்பு


ADDED : பிப் 11, 2024 03:04 AM

Google News

ADDED : பிப் 11, 2024 03:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: நெய்வேலி என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக கெங்கைகொண்டான் பேரூராட்சி 1,2,3., வது வார்டு பகுதிகளில் உள்ள இடங்கள் கையகப்படுத்துவது குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

நெய்வேலி மாவட்ட நில எடுப்பு அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சிவா ருத்ரய்யா தலைமையில் கூட்டம் நடந்தது. தனித் துணை ஆட்சியர் மனோகர், என்.எல்.சி., நிர்வாக இயக்குனர் ஜாஸ்பர் ரோஸ், டி.எஸ்.பி., சபியுல்லா, பொது மேலாளர் சீனிவாச ராகவன், துணை பொதுமேலாளர் சேகர், உதவி பொறியாளர் புகழேந்தி, கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ், கவுன்சிலர்கள் வேல்முருகன், புஷ்பலதா அறிவழகன், கலாவேல் முருகன் பொதுமக்கள் பங்கேற்றனர்.

அதில், கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினர்களுக்கு என்.எல்.சி.,யில் நிரந்தர வேலை வாய்ப்பு, கூடுதல் இழப்பீடு தொகை, மாற்று இடம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் வலியுறுத்தி பேசினர்.

அதற்கு பதிலளித்த அதிகாரிகள் உங்களது கோரிக்கைகள் குறித்து எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும், கோரிக்கைகள் குறித்து கலெக்டர் மற்றும் என்.எல்.,சி., சேர்மனிடம் கலந்து ஆலோசித்து வரும் 17ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us