ADDED : ஜூலை 29, 2025 07:18 AM
நெய்வேலி : என்.எல்.சி., ஊழியர் துாக்குப் போட்டு தற் கொ லை செய்து கொண்டார் .
நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 12ஐ சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்,56; என்.எல்.சி., இரண்டாம் அனல்மின் நிலைய ஊழியர். கடந்த மூன்று நாட்களாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை அவர் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நண் பர் அருணாச்சலம் என்ற சக என்.எல்.சி., நிரந்தர தொழிலாளிக்கு தனியார் நிதி நிறுவனத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனுக்கு ஆரோக்கியதாஸ் ஜாமின் கையெழுத்திட்டார்.
அருணாச்சலம் கடந்தாண்டு இறந்த நிலையில், தனியார் நிதி நிறுவனம் ஆரோக்கியதாசின் ஊதியத்தில் 27 ஆயிரம் ரூபாய் பணம் பிடித்தம் செய்தது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு ஆரோக்கியதாஸ் இறந்தது தெரிந்தது.