ADDED : ஜூலை 23, 2025 07:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி : என்.எல்.சி., நிலக்கரி சுரங்க ஊழியர் மது குடித்த போது, மயங்கி விழுந்து இறந்தார்.
நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 4ஐச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்,56; என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் நிரந்தர ஊழியர். இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று வீடு திரும்பி போது, தனியார் பாரில் மது அருந்தினார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு என்.எல்.சி., மருத்துவமனையில் சேரத்தனர். அங்கு அவர் இறந்தார். நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

