/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கந்து வட்டி கேட்டு மிரட்டிய என்.எல்.சி., தொழிலாளி கைது
/
கந்து வட்டி கேட்டு மிரட்டிய என்.எல்.சி., தொழிலாளி கைது
கந்து வட்டி கேட்டு மிரட்டிய என்.எல்.சி., தொழிலாளி கைது
கந்து வட்டி கேட்டு மிரட்டிய என்.எல்.சி., தொழிலாளி கைது
ADDED : நவ 21, 2025 05:37 AM

நெய்வேலி நவ. 21-: கந்து வட்டி கேட்டு மிரட்டிய என்.எல்.சி., தொ ழிலாளியை டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 24 ஐ சேர்ந்தவர் மரியா ஜோசப். இவரது மனைவி லீமா ரோஸ்லின் ராணி, 50; மரியா ஜோசப், என்.எல்.சி., 2ம் சுரங்கத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறார்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 5 ஐ சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் செல்வராஜ்.40; இவர் என்.எல்.சி., இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
மரியா ஜோசப் தனது குடும்ப செலவுக்காக செல்வராஜிடம் கடந்த 2001 ம் ஆண்டு 4 லட்சம் மற்றும் 2022ம் ஆண்டு ரூ.1.50 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்யாத பத்திரங்களை வழங்கியுள்ளார். இந்நிலையில், மரியா ஜோசப் 17 லட்சத்து, 77 ஆயிரத்து 760 ரூபாயை, வட்டியுடன் திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால் , செல்வராஜ் அந்த பணம் முழுவதையும் வட்டியில் கழித்துக்கொண்டு இன்னும் ரூ. 7 லட்சம் தரவேண்டும் என கேட்டு மரியா ஜோசப்பின் மனைவியை மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து லீமா ரோஸ்லின் ராணி கொடுத்த புகாரின்பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.

