/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., தொழிலாளி விபத்தில் பலி
/
என்.எல்.சி., தொழிலாளி விபத்தில் பலி
ADDED : ஜன 12, 2025 06:52 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மாடு மீது பைக் மோதிய விபத்தில் என்.எல்.சி.,ஒப்பந்த தொழிலாளி இறந்தார்.
பண்ருட்டி அடுத்தகுடியிருப்பு மேற்கு தெருவை சேர்ந்தவர் ஆதிகேசவன்,31; இவர் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 9ம் தேதி இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தர்.
நெய்வேலி--முத்தாண்டிக்குப்பம்சாலையில் வந்போது, ரோட்டின் குறுக்கே வந்த ஒரு மாட்டின் மீது பைக் மோதியதில், அவர் துாக்கிவீசப்பட்டார்.
பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.
முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

