/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிற்காத தனியார் பஸ் சிறைபிடிப்பு நடத்துனர், டிரைவருக்கு போலீஸ் 'அட்வைஸ்'
/
நிற்காத தனியார் பஸ் சிறைபிடிப்பு நடத்துனர், டிரைவருக்கு போலீஸ் 'அட்வைஸ்'
நிற்காத தனியார் பஸ் சிறைபிடிப்பு நடத்துனர், டிரைவருக்கு போலீஸ் 'அட்வைஸ்'
நிற்காத தனியார் பஸ் சிறைபிடிப்பு நடத்துனர், டிரைவருக்கு போலீஸ் 'அட்வைஸ்'
ADDED : அக் 05, 2024 04:20 AM

புவனகிரி : வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டு, பேரி கார்டு அமைத்து, அறிவுறுத்தியும் தனியார் பஸ் நிற்காததை கண்டித்து அப்பகுதியினர் தனியார் பஸ்சை சிறை பிடித்தனர்.
புவனகிரி அருகே ஆதிவராக நல்லூரில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டினை தொடர்ந்து சமீபத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், ஆய்வாளர் விமலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு. நேரில் வந்து கடலுார் ், சிதம்பரம் சாலையில் இயக்கப்பட்ட அனைத்து பஸ்களையும் இந்த இடத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி,இறக்கி செல்ல வேண்டும் என உத்தரவிட்டு அதற்கான உத்தர வினை விளம்பர பதாகையாக அமைத்தனர். சில தினங்கள் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பின் தனியார் பஸ்கள் நிற்காமல் சென்றனர்.
இதனால் புவனகிரி மற்றும் பி.முட்லுாரில் இறங்கி ஆட்டோ பிடித்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் நிற்காததை கண்டித்து,ஆதிவராக நல்லுார் பகுதியில் வந்த தனியார் பஸ்சை சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடததிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சை விடுத்ததுடன், தனியார் பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரிடம் அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். இதுனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.