sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துாக்க மாத்திரை விழுங்கி மயங்கி விழுந்த செவிலியர்; பெண்ணாடம் சுகாதார நிலையத்தில் பரபரப்பு

/

துாக்க மாத்திரை விழுங்கி மயங்கி விழுந்த செவிலியர்; பெண்ணாடம் சுகாதார நிலையத்தில் பரபரப்பு

துாக்க மாத்திரை விழுங்கி மயங்கி விழுந்த செவிலியர்; பெண்ணாடம் சுகாதார நிலையத்தில் பரபரப்பு

துாக்க மாத்திரை விழுங்கி மயங்கி விழுந்த செவிலியர்; பெண்ணாடம் சுகாதார நிலையத்தில் பரபரப்பு


ADDED : செப் 03, 2025 09:08 AM

Google News

ADDED : செப் 03, 2025 09:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்; பெண்ணாடம் சுகாதார நிலையத்தில் டாக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தற்காலிக செவிலியர் துாக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர் தமிழ்அழகன். திட்டக்குடி தொகுதி முன்னாள் தே.மு.தி.க., எம்.எல்.ஏ., இவரது மகள் தமிழ்மொழி, 34; பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 ஆண்டுகளாக தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த மாதம் 10ம் தேதி 'லாஸ் ஆப் பே' என்ற பெயரில் விடுமுறை வேண்டும் என 'வாட்ஸ் ஆப்' செயலி மூலம் பேசி டியூட்டி டாக்டரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதற்கு, விடுமுறை கடிதம் கொடுக்கும்படி டாக்டர் கூறினார். ஆனால், அன்று முதல் தமிழ்மொழி பணிக்கு வரவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்த நல்லுார் வட்டார மருத்துவ அலுவலர், வருகை பதிவேட்டை ஆய்வு செய்தபோது, தமிழ்மொழிக்கு விடுமுறைக்கான காரணம் இல்லை. அதனால், காரணத்தை குறிப்பிடும்படி பணியில் இருந்த டியூட்டி டாக்டரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதன் பிறகு டியூட்டி டாக்டர் வருகை பதிவேட்டில் தமிழ்மொழிக்கு ஆப்சென்ட் போட்டுள்ளார்.

இதனை அறிந்த தமிழ்மொழி நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து, டியூட்டி டாக்டர் நித்தியபாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென தனது ஸ்கூட்டரில் வைத்திருந்த 20க்கும் மேற்பட்ட துாக்க மாத்திரையை விழுங்கி மயங்கி விழுந்தார்.

உடன், அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பெண்ணாடம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்மொழி, வி.சி., மகளிர் விடுதலை இயக்கத்தின், கடலுார் மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பொறுப்பில் உள்ளார். இவரது தந்தை தமிழ்அழகன் தற்போது பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us