sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

/

சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 29, 2025 04:22 AM

Google News

ADDED : மார் 29, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் மச்சேந்திரன் தலைமை தாங்கினார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பாவாடை, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டசெயலாளர் பழனி, மாநில செயலாளர் மனோகரன், ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்டதலைவர் புருஷோத்தமன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடாஜலபதி, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ராமநாதன் சிறப்புரையாற்றினர்.

முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியான மாதாந்திர ஓய்வூதியம் 7,850 ரூபாய், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us