/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சத்துணவு ஊழியர்கள் 2ம் நாளாக மறியல்
/
சத்துணவு ஊழியர்கள் 2ம் நாளாக மறியல்
ADDED : பிப் 05, 2026 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 102 பேரை போலீசார் கைது செய்தனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு பென்ஷன் 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 19,500 ரூபாய், சமையல் உதவியாளருக்கு 15,700 ரூபாய் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் 2ம் நாளாக கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் மறியல் செய்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி தலைமையிலான 102 பேரை புதுநகர் போலீசார் கைது செய்தனர்.

