sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடிநீர் தொட்டியில் ஆயில் கலப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு

/

குடிநீர் தொட்டியில் ஆயில் கலப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு

குடிநீர் தொட்டியில் ஆயில் கலப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு

குடிநீர் தொட்டியில் ஆயில் கலப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு


ADDED : ஜூலை 22, 2025 06:43 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் ஆயில் கலந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அருகே சு.கீணனுார் கிராத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல், நேற்று மதியம் 1:00 மணிக்கு மேல்நிலை தொட்டியில் இருந்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது, குழாயில் இருந்து கருப்பு நிறமாக தண்ணீர் வந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த வந்த கம்மாபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், பிளீச்சிங் பவுடர் கலக்கும் பைப் வழியாக, மர்ம நபர்கள் ஆயிலை கலந்து சென்றது தெரிந்தது. போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us