ADDED : செப் 18, 2024 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் இறந்து கிடந்த மூதாட்டி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே மேம்பாலம் படியில், கடந்த 13ம் தேதி அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, மூதாட்டி யார், எப்படி இறந்தார் என, விசாரிக்கின்றனர்.