ADDED : ஜூலை 10, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே முன்விரோத தகராறில், வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த தீவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரைசெல்வன்,45 அதே பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ், 37; இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், இவர்களுக்குள் கடந்த 6ம் தேதி மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த விஜயராஜ், தாமரைசெல்வனை திட்டி, தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, விஜயராஜை கைது செய்தனர்.