/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி; 26 பேர் காயம்
/
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி; 26 பேர் காயம்
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி; 26 பேர் காயம்
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி; 26 பேர் காயம்
ADDED : டிச 23, 2024 12:15 AM

ராமநத்தம்; சென்னை, கிளாம்பாக்கம் ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தனியார் ஆம்னி பஸ், 54 பயணியர் மற்றும் மூன்று டிரைவர்களுடன் கன்னியாகுமரி புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த மணிகண்டன், 56, ஓட்டினார்.
நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, கடலுார் மாவட்டம், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆவட்டி அடுத்த லக்கூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தேசிய நெடுஞ்சாலை மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
அப்போது, அவ்வழியே பின்னால் வந்த சரக்கு லாரி, விபத்துக்குள்ளான ஆம்னி பஸ் மீது மோதியது. இதில் பஸ் பயணி, திருநெல்வேலியை சேர்ந்த சங்கர், 25, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும், கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்டாலின் கிறிஸ்டோபர், 44, ஆனந்தன், 32, அலெக்சாண்டர் மகள்கள் மேரி கெபிஷா, 23, மேரி பவிஷா, 18, மாரியப்பன், 40, திருநெல்வேலி லட்சுமணன், 22, கார்த்திகேயன், 56, அவரது மகள் வெண்மதி, 21, உட்பட 26 பேர் காயமடைந்தனர். அனைவரும் பெரம்பலுார், திருச்சி, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநத்தம் போலீசார், திட்டக்குடி தீயணைப்பு துறையினர், நகாய் ஊழியர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

